Yettukalvi

 ஏட்டுக் கல்வி


சிறகுகளை விரிக்குமுன்னே

பொதி சுமக்கக்

கற்றுக்கொடுத்தது

புத்தகப்பை சுமந்தே

பூப்பெய்திய புன்னகை மலர்கள்

கற்கும் பாடங்கள் எதுவும்

வாழ்க்கையோடு

வாழவிரும்புவதில்லை

தாவணிக்குத் தாவும் முன்னே

தாலிக்கு தாரை வார்த்தாள்

பிள்ளை மனம் மாறுமுன்னே

தாலாட்டும் தாயானாள்

எட்டாக் கனிகள்

கிட்டியது கைக்கு

எட்டிக் காயாய்

அறிவுக்கான தேடலில்

உணர்வுகள் உட்புகுந்து கொள்கிறது

பாலில் விஷமும்

பரிணமித்து விடுகிறது

தோன்றும் முன்னே

தேயும்  நிலாக்கள்

சுயத்தைச் சுடும்

சூரியன்கள்💦

போர்வைக்குள்

புதைய மறுக்கும் பிறைகள்

சமூகத்தை 

வெளுக்கவே விடாத கறைகள்

எழுதப்படாத லிபியாய்

வாழ்க்கைப் புத்தகம்

Comments

Popular posts from this blog

பொய்தேசம்